tamilnadu

img

இந்தியாவில் இன்று மேலும்  46,232 பேருக்கு கொரோனா....  

புதுதில்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 46,232பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா  தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்துகுறைந்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்புதிதாக 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,50,598 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 49,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,39,747 பேர்சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இதுவரை 13 கோடியே 06 லட்சத்து 57ஆயிரத்து 808 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஒருநாளில் மட்டும் 10,66,022மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

;