அம்பத்தூர், ஜூலை 1- தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட 2 பேரை வரும் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சாவூரில் ‘ஹிஷாப் உத்தஹீரிர்’ என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படு பவா்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
தேசிய புலனாய்வு அமைப்பினா் 4 வீடுக ளில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொண்ட சோதனையின் போது, கைப் பேசிகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், டிவிடி, சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.இதைத்தொடா்ந்து, அப்துல் ரஹ்மான் (22), முஜிபுா் ரஹ்மான் (46) ஆகிய 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினா் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இவர்கள் இருவரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி, ஞாயி றன்று இரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதியின் வீட்டிற்கு சென்று, நீதிபதி இள வழகன் முன்பு 2 பேரையும் ஆஜர்படுத் தினர். இதையடுத்து அவர்கள் இரு வரையும் வரும் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் . இதனைத் தொடர்ந்து அவர்கள் புழல் சிறை யில் அடைக்கப்பட்டனர்.