இந்திய சட்டத்தின் பெயர்களையும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதை கண்டித்தும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் வி. சுரேந்தன் தலைமையில் வியாழனன்று (ஜூன். 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் கே. பாபு, மோகன், ஜெயக்குமார் மற்றும் மகளிர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூலகர் ஈஸ்வரி, தமிழரசி, மாயாதேவி, மகாலட்சுமி உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டார்.