tamilnadu

img

அடிப்படை வசதி கேட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை, செப். 4 - பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் அடிப்படை வசதி கேட்டு புதனன்று (செப். 4) கல்லூரி வளாகத் திற்குள், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். காலை 10 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்க, கழிவறைக்கு செல்ல கல்லூரி  நிர்வாகம் அனுமதி மறுத்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது. அனைத்து கட்டிடங்களிலும் (பிளாக்)  கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு தளத்திலும், உணவகத்தி லும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், சேதமடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும், விடுதி உணவு கட்டணத்தை குறைத்து சத்தான உணவு வழங்க வேண்டும். சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் வைப்ப தோடு, அதை எரியட்டும் கருவியை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். கல்வி வளாகத்தில் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், நிர்வாகிகள் ரவிகாந்த், சாம் உள்ளிட்டோர் போராட் டத்தில் பேசினர்.