tamilnadu

‘மிக்ஜம்’ புயல் வெள்ள நிவாரணத்தில் பங்களிப்பு

சென்னை, டிச.7-
மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் (சிஐடியு) பொதுச்செயலாளர் கே. திருச்செல்வன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“மிக்ஜம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்  களில் டிசம்பர் 2 அன்று துவங்கி டிசம்பர் 4 நள்ளிரவு வரை இடை விடாது பெய்த மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அரசுத் தரப்பில் உள்ளூர் நிர்வா கங்கள் வெள்ள நீரை வெளியேற்ற வும், வெள்ளம் சூழ்ந்து குடி யிருப்பை விட்டு வெளியே வரமுடி யாத மக்களுக்கு உணவுப் பொருட்  கள் வழங்கியும், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவு மான பணிகளை மேற்கொண்டு வரு கிறது. பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் தன்னார்வத்துடன் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த மனிதநேய பணிகளில் டாஸ்மாக் ஊழியர்களும் இணைந்து மக்களின் மீட்பு மற்றும்  நிவாரண பணிகளுக்கு உதவிடும்  வகையில் ஒருநாள் ஊதியத்தை  அரசுக்கு வழங்கிட முன்வந்துள்ள னர் என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.

எனவே, தாங்கள் டாஸ்மாக் ஊழியர்களின் ஒருநாள் ஊதி யத்தை கணக்கிட்டு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட உரிய நிர்வாக  நடவடிக்கையை மேற்கொள்ள  வேண்டுமென கேட்டுக்கொள்கி றோம்” என்று கடிதத்தில் கே. திருச்  செல்வன் குறிப்பிட்டுள்ளார்.