tamilnadu

img

‘பாஜக சர்வாதிகாரத்திற்கு முடிவு நெருங்குகிறது’

சென்னை, மார்ச் 22- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில  முதல்வர்களைக் குறிவைத்து, ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்  துறையை ஏவி வருகிறது. கடந்த  மாதம் ஜார்க்கண்ட் மாநில முதல் வர் ஹேமந்த் சோரனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்ததாக மக்களவைத் தேர்தல்  அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில்,  வியாழனன்று இரவு தில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ளது.

இது நாடு முழுவதும் எதிர்க்  கட்சிகள் மத்தியில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்  தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்  கள் தங்களின் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். 

பாசிச பாஜக!
அந்த வகையில், கெஜ்ரிவால்  கைதுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் தனது கண்டனத் தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பதி விட்டிருக்கும் அவர்: “2024 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 10  ஆண்டுகால தோல்விகள் மற்றும்  வரப்போகும் தேர்தலில் கிடைக்கப்  போகும் தோல்வி ஆகியவற்றின் பயத்தால், ஹேமந்த் சோரனை அநி யாயமாக குறிவைத்ததை தொட ர்ந்து, தற்போது தில்லி முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க வகை யில் தாழ்ந்துவிட்டது.

உண்மையான முகம் வெளிப்பட்டது!
அதிகார துஷ்பிரயோகம் மற் றும் ஜனநாயகத்தின் சீரழிவின் கார ணமாக, ஒரு பாஜக தலைவர் மீது  கூட விசாரணையோ, கைது நட வடிக்கையோ மேற்கொள்ளப்படு வதில்லை. பாஜக அரசாங்கத்தால்  எதிர்க்கட்சித் தலைவர்கள் இடை விடாமல் துன்புறுத்தப்படுகின்ற னர்.

இந்த சர்வாதிகாரப் போக்கு பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது. பாஜகவின் உண்  மையான நிறத்தை வெளிக் கொணர்கிறது. ஆனால் அவர்  களின் வீணான கைது நடவடிக்கை கள் நமது உறுதியை அதிகப் படுத்தி, ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்து கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்லை தாண்டிய எதேச்சதிகாரம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

“நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள  நிலையில் அமலாக்கத்துறை ஒரு மாநில முதல்வரை, எதிர்க்  கட்சி கூட்டணியின் முக்கியத் தலைவரை கைது செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் எல்லை தாண்  டிய பாசிச காட்டுமிராட்டி வெறித்தன தாக்குதலின் வெளிப்பாடாகும்.

“நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள  நிலையில் அமலாக்கத்துறை ஒரு மாநில முதல்வரை, எதிர்க்  கட்சி கூட்டணியின் முக்கியத் தலைவரை கைது செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் எல்லை தாண்  டிய பாசிச காட்டுமிராட்டி வெறித்தன தாக்குதலின் வெளிப்பாடாகும்.

இரா.முத்தரசன், சிபிஐ மாநிலச் செயலாளர்.

அடக்குமுறையை முறியடிப்போம்!
காங்கிரஸ் கட்சி கண்டனம்

மக்களவைத் தேர்தல் நேரத்தில், தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி யை கவிழ்ப்பதற்கு சதி நடக்கிறது. அதன் வெளிப்பாடாகத் தான்  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்  துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைவிட ஒரு ஜனநாயக படுகொலை எதுவும் இருக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்  அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, மத்திய புல னாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாக அடக்குமுறைகள் ஏவி விடப்படுகின்றன. எதிர்க் கட்சிகளை ஒடுக்குவதற்கு, முடக்குவதற்கு அம லாக்கத் துறையை மோடி பயன்படுத்துகிறார். சர்வாதிகாரிகள் ஆட்சி யில் நீண்ட காலம் நீடித்ததில்லை. அதை போல விரைவில் மோடி  ஆட்சி அகற்றப்படும். ஜனநாயகம் நிலைநாட்டப்படும். மோடியின் அடக்குமுறையை இந்தியா கூட்டணி ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிக்கும்.

கு.செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்