சென்னை, டிச.17- மாற்றுத்திறனாளிகளுக்கான எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பெங்களூரில் ஆலூர் கேஎஸ்சிஏ மைதானத்தில் நடை பெற்றது.
3வது லீக் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், பெங்களூரு ஈகிள்ஸ் அணியும் சென்னை லெஜண்ட்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சக்கர நாற்காலி விளையாட்டு வீரர்களின் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கன்னட பிரபா பத்திரிகையின் துணை செய்தி ஆசிரியர் ஸ்பந்தன் கணியார், விளையாட்டுத் துறை தலைவர் முகுந்த் ஷெட்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின் இந்திய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். இது போன்ற போட்டிகள் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்து வருவதாக சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ஜுன் ரங்கா கூறினார்.