tamilnadu

img

அசானி புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை நிறுத்தம்  

அசானி புயல் எதிரொலியால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து 10 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.  

வங்கக் கடலில் அசானி புயல் உருவாகியுள்ள நிலையில் ஒடிசா, ஆந்திரா அருகே இந்த புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கும், காலை  10:40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  

அதைப்போல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய இன்று காலை 10:40 மணிக்கும், நன்பகல் 1.45 மணிக்கும் சென்னை வரவேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.    

இந்த விமானங்கள் ரத்து பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் நேற்று மாலையே தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.