tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

73 வது சுதந்திர தினம் சென்னையில் 73 கிலோ சாக்லெட் தயாரிப்பு 
சென்னை,ஆக. 13 இந்தியாவின் 73வது சுதந்திர நாளை முன்னிட்டு சென்னையில் 73 கிலோ சாக்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட ஃபேபெல்லே எச்விசிட் சாக்லெட் 6 புதிய வகை சாக்லேட்டு களையும் அறிமுகம் செய்துள்ளது. இளஞ்சிவப்பு இமாலய உப்பை கொண்ட டார்க் சாக்லெட், தார்ப்பாலைவனம் என்ற பெயரில் உப்பு வேர்கடலையால் செய்யப்பட்ட டோஸ்டெட் சிசாமே சாக்லெட், கங்கை சமவெளி என்ற பெயரில் வெல்லத்தூள் மற்றும் மில்க் சாக்லெட், மையச் சமவெளி என்ற பெயரில் ஆரஞ்சு உலர் திராட்சை கலந்த டார்க் சாக்லெட், தக்காண பீடபூமி என்ற பெயரில் காபி மற்றும் ஏலக்காய் தூள் கலந்த வெள்ளை நிறச் சாக்லெட், கடற்கரை பகுதிகள் என தேங்காய் பவுடர் மாம்ழபம், பால் சேர்த்து தயாரிக்கப்பட்ட 6விதமான சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மேக் எ விஷ் பவுன்டேஷனின் சமூக நலப்பணிகளுக்கு வழங்கப்படும். இந்த பவுண்டேஷன் 3லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளதாக ஐடிசி நிறுவனத்தின் காபி மற்றும் புதிய வகை உணவு பிரிவு தலைமை அதிகாரி அனுஜ் ரஸ்தாகி கூறினார்.

கடன் பத்திரங்கள் விற்பனை
சென்னை,ஆக.13-பங்குகளாக மாற்ற இயலாத வட்டி வருவாய் உத்தரவாதத்துடன் கடன் பத்திரங்களை ஜே.எம்.பைனான்சியஸ் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ஆக.6 ஆம் தேதி வெளியிட்டது.
இந்தக் கடன் பத்திரங்கள் நிலையான வருவாய் தரும் என்று கிரிசில் மற்றும் இக்ரா மதிப்பீட்டு நிறுவனங்கள் சான்று அளித்துள்ளன. ஜேம்எம் பைனான்ஸ்  முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமாகும். இது, நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, மற்ற நிறுவனங்களிடமிருந்து கடன் ஏற்பாடு செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு நிதிசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பின்னாளில் பங்குகளாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத, ஆனால் பணமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி கொண்ட இந்தக் கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றும் 1000 ரூபாய் என்ற முகமதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. பத்திர விற்பனை அடுத்த மாதம்  4ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.