tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

காலமானார்

சென்னை, மே 14 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 117வது வட்ட கிளை உறுப்பினரும், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி தலைவருமான சி.சசிக்குமாரின் சகோதரி ஜெ.ரங்கநாயகி திங்களன்று (மே 13)காலமானார். அவருக்கு வயது 51.அன்னாரது உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர்கள் அ.இரணியன் (ஆயிரம் விளக்கு), இ.மூர்த்தி (தி.நகர்), பகுதிக்குழு உறுப்பினர் சிவா, கிளைச் செயலாளர்கள் ராஜாமணி, பிலிப்ராஜ், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று (மே 14) கண்ணமாபேட்டை மயானத்தில்நடைபெற்றது.  


மாரடைப்பால் நடத்துனர் மரணம்

போரூர், மே 14-புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையை சேர்ந்தவர் கோபி (40). இவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துநடத்துனராக பணிபுரிந்து வந்தார்.கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனக்கு கொடுக்கப்பட்டபயணிகள் டிக்கெட் காணாமல் போனதாக அதிகாரிகளிடமும், பேருந்து நிலைய காவல்நிலையத்திலும் கோபி புகார் அளித்தார். இதன் காரணமாக போக்குவரத்து அதிகாரிகள் கோபிக்கு பணி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ளபோக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு அறையில் இருந்த கோபிதிடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் கோபியை பரிசோதனை செய்த போது கோபி இறந்து போனது தெரியவந்தது.  


காலமானார்

சென்னை, மே 14 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதி, திருவான்மியூர் கிளை உறுப்பினர் செந்தாமரை கண்ணனின் தந்தை டி.கன்னியப்பன் செவ்வாயன்று (மே 14) காலமானார். அவருக்கு வயது 95.இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, கிளைச் செயலாளர் கருணாநிதி, ஆட்டோ கிளைச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.