சென்னை:
திருமாவளவன் பேசியதை திரித்து பரப்பி வன்முறையைத் தூண்டுபவர் கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது, எடப்பாடி அதிமுக அரசின் சைபர் கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான - வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது’ என்று கடுமையாக சாடியுள்ளார்.
திருமாவளவன், ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, பெரியாரும், அம் பேத்கரும், காலம் காலமாக என்ன கருத்துகளை எடுத்துச் சொல்லி, இந்த மண்ணில் விழிப்புணர்ச்சியை உருவாக்கினார்களோ, அந்த வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்திருக்கிறார். மக்கள்தொகையில் சரிபாதியாகவும் - அதற்கும் கூடுதலாகவும் உள்ள பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை, சனாதன – வருணாசிரம - மனுஸ்மிருதிகளை மேற் கோள் காட்டிப் பேசியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," பெண் களை அடிமைப்படுத்தும் ஏராளமான கருத்துக்களை முன்வைத்து, மனுதர்மத்தை எழுதியவர்களும், அதனை ஆதரிப்போரும் தான் சட்ட- ஒழுங்க சீர்குலைத்து, சமூக அமைதியை கெடுத்து வரும் குற்றவாளிகள் என் பதை காவல்துறை உணர வேண்டும்.இதற்கு நேர்மாறாக இந்துத்துவக் கருத்தியலின் கயமைத்தனத்தை விளக்கிக் கூறிய தொல். திருமாவளவன் மீது வழக்குப் போட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் குறித்தும், மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மீதும் ஆபாச அவதூறு பரப்பிவரும் சமூக ஊடகக் குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் பட்டது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக காவல்துறையில் கூறினார்கள். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை ஒரு துரும்பும் அசைக்கப் படவில்லை. ஆனால், தொல். திருமாவளவன் மீது மட்டும் வழக்கு பதிவு செய் யப்பட்டிருப்பது என் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ," மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத் தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர். உண்மையில், புகார் கொடுத்தவர் கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப் பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.