மதுரை/சென்னை, மார்ச் 25 - மதுரை, திண்டுக்கல் உட்பட திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சு.வெங்கடேசன்
திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் சு.வெங்கடேசன் திங்களன்று வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மா.சௌ.சங்கீதாவிடம் தாக்கல் செய்தார்.
மனுத் தாக்கலின் போது, அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கோ.தளபதி (திமுக), காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் எம்.சி., ஆகியோர் உடனிருந்தனர்.
சு.வெங்கடேசனுக்கு மாற்று வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந் திரன் மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர் சு.வெங்கடேசன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலின் கருப்பொருள் ‘‘நாட்டின் ஜனநாயகம்-அரசியலமைப்பை பாதுகாப்பது’’. இந்தத் தேர்தலில் ‘பாசிச பாஜக’வின் ஆட்சி அகற்றப் படும். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரும் வெற்றிபெறும்.
மதுரையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதல்வரும் நல்ல திட்டங்களை அமலாக்கி வருகிறார்.
கடந்த ஐந்தாண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். கடந்த மக்க ளவைத் தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு கள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை யோடு எங்களது பிரச்சாரத்தை தொடங்குகிறோம்’’ என்றார்.
ஆர்.சச்சிதானந்தம்
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர் ஆர்.சச்சிதானந்தம் திங்க ளன்று திண்டுக்கல் ஆட்சியர் அலு வலகத்தில் தேர்தல் நடத்தும் அலு வலரும், திண்டுக்கல் ஆட்சியரு மான பூங்கொடியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக திண்டுக்கல் புற வழிச்சாலையில் உள்ள அஞ்சலி ரவுண்டா அருகில் திமுக தலைமை யிலான இந்தியா கூட்டணி கட்சியின் தொண்டர்களும், தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராம லிங்கம், என்.குணசேகரன், கே.பால பாரதி, என்.பாண்டி, டி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டி.ஆர்.பாலு
மேலும் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), வை.செல்வராஜ் (நாகப்பட்டினம்), விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, இராமநாதபுரம் தொகுதி ஐயுஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனி உள்பட பல்வேறு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெரும் உற்சாகத்துடன், கூட்டணி கட்சிகளின் தொண்டர்களது வாழ்த்துக்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.