tamilnadu

img

கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தால் மாதம் ரூ.1,283 வரை சேமிக்கும் மகளிர்! தமிழக அரசு தகவல்

சென்னை, மே 18- நகரப் பேருந்துகளில் மக ளிர்க்கு கட்டணமில்லா பய ணத் திட்டத்தை தமிழக அரசு  கடந்த 2021-ஆம் நடை முறைக்கு கொண்டு வந்தது.  அப்போது முதல் கட்டண மில்லா பேருந்துப் பயணத்  திட்டத்தால் பயன்பெறும் மக ளிரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

ஜூலை 2021-இல் ஒரு நாளைக்கு 35 லட்சம் பெண்  கள் இலவச பயணம் செய்த  நிலையில், இப்போது அதன்  எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது; 2024  மார்ச் கணக்கின்படி நாளொ ன்றுக்கு 55 லட்சம் பெண்கள்  கட்டணமில்லா பேருந்து பய ணத்தை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலம் ஏழை, நடுத்  தரப் பெண்கள் மாதம் ரூ. 800  முதல் ரூ. 1,283 வரை பேருந்  துக்கு செலவழிப்பது மிச்ச மாவதாக மாநில திட்டக்குழு வின் ஆரம்ப தாக்க மதிப்  பீட்டு ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி அரசு வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.

5984 நகர வழித்தடங்க ளில் இயக்கப்பட்டு வந்த பிங்க்  கலர் பேருந்துகள் கடந்த  பிப்ரவரி மாதம் முதல் கூடு தலாக 257 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கடந்த 3 நிதி யாண்டுகளில் இலவச பேருந்து பயண திட்டத்திற்  காக ரூ.6,946 கோடியை ஒதுக்கி இருந்த நிலையில்  தற்போது இந்த நிதியாண் டுக்கு ரூ.3,050 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்த இலவச பயணம் திட்டத்தின் மூலம் மே 9  வரை 468 கோடி பயணங்  களை பெண்கள் மேற் கொண்டுள்ளனர்.

மாநில திட்டக்குழுவின்  ஆரம்ப தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையானது, இந்த திட்டம் குறைந்த வரு மானம் உள்ள பெண்களுக்கு  உதவியதாகவும், இதன்  மூலம் அவர்கள் பேருந்து பய ணத்திற்கு செலவிடுவது சேமிக்கப்படுவதாகவும் இது அவர்களது வாழ்க்கையை பொருளாதார ரீதியாக முன்  னேற்ற பாதைக்கு கொண்டு  செல்வதாகவும் தெரிவித்தி ருந்தது. 

இதன் மூலம் சமூக அமைப்பில் பெண்களின் அந்தஸ்து பொருளாதார ரீதி யாக உயர்ந்துள்ளதோடு வேலைக்குச் செல்லும் பெண்  களுக்கு ஒரு வரப்பிரசாத மாக இத்திட்டம் அமைந்துள்  ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலவச பேருந்  துப் பயண திட்டத்தில் பய ணம் செய்யும் 60 சதவிகிதப் பெண்கள் 40 வயதுக்கு உட்  பட்டவர்கள் என்றும் 80 சத விகிதம் பேர் எஸ்.சி. மற்றும்  பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.