சென்னை, மார்ச் 14 - பாசிச வலதுசாரி போக்குகளால் சமூக நீதி சிதறுண்டு உள்ளது என்று ஆய்வா ளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை சமூகப் பணிக் கல்லூரியின் சமூகப் பணித் துறையும், சமூகநீதி மற்றும் சமத்துவ மையமும் இணைந்து ‘நிலையான வாழ்க்கை மாற்றம் மற்றும் சமூகநீதிக்கான சமூகப்பணி’ குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை நடத்துகின்றன. இந்த கருத்தரங்கம் வியாழனன்று (மார்ச். 14) சென்னையில் தொடங்கியது.
கலந்து ரையாடல் நிகழ்வுக்கு சமூக நீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்குநர் முனைவர் ஆர். பவணந்தி வேம்புலு தலைமை தாங்கி னார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா மத்திய பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் சஞ்சய் இங்கோல் குறிப்பிடுகையில், பாசிச வலதுசாரி போக்குகளால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமூக நீதி யானது சிதறுண்டு இருப்பதை சுட்டிக்காட் டினார். ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தின் சமூகப் பணித் துறையின் உதவிப் பேராசிரியர் எஸ். லலிதா பேசுகையில், சமூகப்பணித் துறை விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக் கான இயக்கமாக செயல்பட வேண்டியதன் தேவையை எடுத்துரைத்தார்
. பள்ளிகளில் நிலவும் சாதிப் பாகுபாடு கள் பற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வை எடுத்துக் கூறி, மாணவப் பருவத்திலேயே விதைக்கப்படும் சாதிய பாகுபாட்டைக் களையாமல் சமூக நீதி சாத்தியமற்றது என்றார். உடல் உழைப்பால் மனிதக் கழிவை அகற்றும் சமூகத்திற்கான இயக்கத்தின் நிறு வனர் விமல் குமார், சாதியினால் நிகழும் மனிதக் கழிவுஅகற்றும் மக்களின் இறப்பிற்கும், சமூக நீதி மறக்கடிக்கப்படு வதற்குமான தொடர்பை விவரித்தார்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. சம்கி ராஜ் பேசுகையில், வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அரச வன்முறை குறித்து விவரித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் சமூகப் போராட்டத்தினாலும், 32 ஆண்டு கால சட்டப் போராட்டத்தினாலும் நீதி பெறப்பட்டுள்ளது. ஒடுக்கப்படும் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான நியா யத்தை எளிதில் வழங்கக்கூடிய வகையில் அரசு அதிகாரிகளின் மனநிலை இல்லை என்றார்.