tamilnadu

img

பிஎஸ் - 6 ரக பேருந்துகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை,ஜன.20- காற்று மாசை குறைக் கும் வகையில் பிஎஸ்-6 ரக பேருந்துகள் இயக்கப் படவுள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக 1,666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தின் மத்திய  பணிமனை, பல்லவன் இல்லம், பல்லவன் சாலை யில் 100 பிஎஸ்-6 பேருந்து களை சனிக்கிழமை (ஜன.20)  பொதுமக்களின் பயன் பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவ சங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, போக்குவரத்து கூடு தல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.