கோவாவில் வேண்டு மென்றே வகுப்புவாத பதற்றத்தை பாஜக தூண்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரித்தாளும் கொள் கையை கோவா மற்றும் ஒட்டு மொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருப்பதால் அக்கட்சி யின் முயற்சிகளுக்கு தடை யில்லாமல் போகாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல்காந்தி, தனது எக்ஸ் தளத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், கோவா வின் ஈர்ப்பே அதன் இயற்கை எழில்மிகு அழகு மற்றும் அங்குள்ள மாறுபட்ட மற்றும் இணக்கமான அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலில் உள்ளது. துரதிருஷ்டவசமாக, அங்கிருக்கும் பாஜக ஆட்சியில் இது தாக்குத லுக்குள் ளாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அங்கு வேண்டு மென்றே வகுப்புவாத பதற் றத்தைத் தூண்டுகிறது, கோவாவில் பாஜகவினரின் உத்தி மிகவும் தெளிவாக உள்ளது. மக்களைப் பிரிக்கும் அதே வேளையில் சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சட்டவிரோ தமாக பசுமை நிலங்களாக அறி வித்து அதைச் சுரண்டுவது, சுற்றுச்சூழல் விதிகளை மீறு வதன் மூலம் கோவாவின் இயற்கை மற்றும் சமூக பாரம்பரியத்தின் மீது தாக்கு தல் தொடுப்பது என பாஜக வின் இந்த செயல்கள் ஒரு போதும் நிற்காது. கோவா மற்றும் ஒட்டுமொத்த தேசமும் இந்த பிளவுபடுத்தும் கொள் கைக்கு எதிராக அணிதிரள் வார்கள் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.