சென்னை ஆவடி அருகே கொள்ளுமேடு பகுதி உள்ளது. இங்கு வசித்து வந்த தம்பதியின் மகளுக்கு 16 வயசாகிறது. ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்த சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறார். பெற்றோர்கள் இருவரும் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 4 ஆம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் பாஜக வின் அப்பகுதியின் நிர்வாகி சீனிவாசன் (வயது 45) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகிவிட்டார்.
மாலை பெற்றோர் வீட்டுக்கு வந்ததும், நடந்ததை கூறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆவடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்த சீனிவாசனை இட்னரு கைது செய்துள்ளனர்.