சிதம்பரம், டிச. 23- சென்னையை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் தமிழ் நாடு சைக்கிள் கிளப் ஒவ்வொரு ஆண்டும் நீர்நிலைகள் பாதுகாத்தல், பண்பாடு, கலாச்சாரம், மரங்களை காப்பது உள்ளிட்ட சமூக விழிப்பு ணர்வுக்காக கடந்த 10 ஆண்டுகளாக சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மேற்கொள்கிறது. இந்தாண்டு தமிழ்நாடு சைக்கிள் கிளப்பும், தமிழ்நாடு சுற்றுலா துறை யும் இணைந்து மதச்சார்பின்மை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 1,008 கி.மீ. விழிப்பு ணர்வு சைக்கிள் பிரச்சாரம் தஞ்சாவூ ரில் துவங்கியது. இதில் சிங்கப்பூர், சுவீடன், ஆஸ்தி ரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும், தமிழ்நாடு, நாக்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 3 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள் ளனர். இந்த சைக்கிள் பேரணி திங்க ளன்று (டிச. 23) சிதம்பரம் வந்த டைந்தது. இதுகுறித்து ஒருங்கி ணைப்புக் குழுவைச் சேர்ந்த ராஜா ராம் கூறுகையில், நாம் அனைவர் வீட்டிலும் இருசக்கர வாகனம் உள்ளன. பெரும்பாலானோர் வீடு களில் கார்கள் உள்ளன. குறைந்த தூரம் செல்வதற்கு இருசக்கர வாக னத்தையும், காரையும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்துவதால் காற்று மாசடைகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி றார்கள். இதனை அனைவரும் கருத் தில் கொண்டு சைக்கிள் ஓட்ட வேண்டும். மேலும் நம் நாடு மதச்சார் பின்மையை கொண்ட நாடாகும். இங்கு வாழும் மக்கள் மதங்களை கடந்து சகோதர்களாக வாழ வேண்டும் என வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெறுகிறது என்றார். இந்த விழிப்புணர்வு பேரணியில் சிதம்பரம் சுற்றுலாத் துறை அலுவ லர் சின்னசாமி, தமிழ்நாடு சைக்கிள் கிளப் ஒருங்கிணைப்பாளர் வசந்த், உறுப்பினர்கள் ராஜாராம், வெங்கடே சன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.