“பாஜக அரசால் எங்களின் நிதி ரூ. 285 கோடி திருடப்பட்டு இருக்கிறது. மோடி காங்கிரசையும், ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளையும் ஒழிக்க முயற்சிக்கிறார். நிதி ஆதாரத்தை முடக்கினால், காங்கிரஸை முடக்கிவிடலாம் என மோடி பகல் கனவு காண்கிறார். அதனை அவ்வளவு எளிதில் முடக்கிவிட முடியாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.