செங்கல்பட்டு, டிச.31- செங்கல்பட்டில் நடைபெற்று வரும் 5வது புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக புத்தகம் வாங்கிக் கொள்ள ரூ 100 கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கை புத்தக திருவிழா கடந்த 28 ம் தேதி முதல் ஜனவரி 4 வரை நடைபெற உள்ளது. 80 க்கு மேற்பட்ட அரங்குகளில் 1000 த்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ100 கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்புத்தக திருவிழாவில் 3 வது நாளான சனிகிழமையன்று (டிச. 30) தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. ‘சிகரம் நம் உயரம்’ என்ற தலைப்பில் பேராசிரியர். இ.சா.பர்வீன் சுல்தானா கருத்துரையும் , நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, தனித்துணை ஆட்சியர் சாகிதா பர்வின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.ஜெயலலிதா,மற்றும் அரசு அலுவலர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.