tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப். 18- குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு சென்னையில் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணிபுரிந்துஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் திட்டமான சத்துணவு, அங்கன்வாடி துறையில் 35 ஆண்டுகள் பணி முடித்த ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதாந்திர பென்சன் ரூ 2ஆயிரத்திலிருந்து உயர்த்தி ரூ 7850வழங்க வேண்டும் என கோரி  இந்த ஆர்ப்பாட்டம் சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் வி. முருகன் தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் சுகந்தி, மாவட்டச்செயலாளர் எஸ். சொர்ணம், பொருளாளர் இந்திராணி, அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ராமசாமி, சத்து ணவு ஊழியர் சங்கத்தின்  மாவட்டத் தலை வர் ஆர்.கேசவன், செயலாளர் இ.குப்பம் மாள், எஸ்.ஜெ.வி.கட்டபொம்மன், எம்.பரிமளா, மேரி ஜானகி ஆகியோர் பேசினர்.