சென்னை, ஆக. 31 - தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்க கம் நடத்தும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு எஸ்.சி. பட்டியலின இட ஒதுக்கீட்டில் எஸ்சிஏ (அருந்ததியர்) மாணவர்கள் பங்குபெறுவதற்கு அனுமதிக்கக் கோரி முதலமைச்சருக்கு ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனத் தலை வர் இரா. அதியமான் முதலமைச்ச ருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், நடப்பாண்டில் தமிழ்நாடு மருத்து வக் கல்வி இயக்ககம் நடத்தும் 2024- ஆண்டுக்கான (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) கலந்தாய்வு எஸ்சி பட்டியலின இட ஒதுக்கீட்டில் எஸ்சிஏ (அருந்ததியர்) மாணவர்கள் கலந்தாய்வில் பங்கு பெற அனுமதிக்கவில்லை.
எஸ்.சி. மாணவர்களுக்கான கட்- ஆப் மதிப்பெண்களுக்குள் அருந்ததி யர் மாணவர்களின் கட்-ஆப் மதிப் பெண்கள் இருந்தால், எஸ்சிஏ அருந்ததியர் மாணவர்கள் எஸ்.சி. இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிமை இருக்கிறது. (அரசாணை 29.5.2009 தேதியிட்ட GO (MS) v©. 61, SC (அருந்ததியர்கள்) SC இடஒதுக்கீடு இடங்களின் கீழ் சேர்க்கை பெறத் தகுதியுடையவர்கள் என்று தெளிவாக குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்க கம் இதைக் கருத்தில் கொள்ள வில்லை.
2024-ஆம் ஆண்டுக்கான தகுதிப் பட்டியல் சரியாகத் தயாரிக்கப்படாத தால், பல எஸ்சிஏ (அருந்ததியர்கள்) மாணவர்கள், எஸ்சி தகுதிப் பட்டியலில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பு இழந்துள்ளனர்.
இதனால் அருந்ததியர் மாணவர்க ளின் கல்வி வாய்ப்பு கேள்விக்குறி யாகும் நிலை உள்ளது.
எனவே, எஸ்சி பட்டியலின இட ஒதுக்கீட்டில் எஸ்சிஏ அருந்ததியர் மாணவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வில் இடம் பெற தமிழக அரசும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கமும் தேவையான நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.