தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படக்குழுவினருக்கு சனிக்கிழமையன்று (டிச.21) பாராட்டு கூட்டம் நடைபெற்றது. அசோக்சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பேசினார். படத்தின் இசையமைப்பாளர் டென்மா, ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார், திரைக்கலைஞர் வினோத், பாடலாசிரியர்கள் தனிக்கொடி, அறிவு மற்றும் திரைப்பட இயக்குநர்கள் லெனின்பாரதி, மீராகதிரவன், சரவண ராஜேந்திரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் வெ.இரவீந்திரபாரதி, தலைவர் சி.எம்.குமார், பொருளாளர் கமலக்கண்ணன், எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர்.