“சமூகநீதிக் கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்ட பாஜகவுடன், பாமகவினர் கூட்டணி வைத்துள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் சண்டை வரும் என சொன்ன அண்ணாமலையுடன் பாமக வைத்துள்ள கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு புதுவை உட்பட 40 தொகுதியிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்ற இருக்கிறோம்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.