சென்னை:
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.அமமுக பொருளாளர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வெற்றிவேல் உடல் நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கடந்த வாரம் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை சற்று தேறினார்.தற்போது சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், வெற்றிவேல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.