tamilnadu

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தங்கள் சிபிஎம் கடும் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் நடத்துவதில் வெளிப் படைத்தன்மையை உத்தரவாதப்படுத்து வதற்காக தேர்தல் ஆணையம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி, டிஜிட்டல் சாதனங்களையும், வீடியோக்களையும், எலக்ட்ரானிக் பதிவுகளையும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பயன்படுத்திட அனுமதித்திருந்ததை தடுத்திடும் விதத்தில் இப்போது மோடி அரசாங்கம் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவர முன்மொழிவினை அனுப்பியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் கடும் ஆட் சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதிய விதிகளை வரைவு செய்கையில் அரசாங்கம் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசனைகள் மேற்கொண்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து, அவ்வாறு அது ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, கடந்த காலங்களில் மேற்கொண்டதைப்போல அரசியல் கட்சி களுடன் எவ்விதமான கலந்தாலோசனை களையும் மேற்கொள்ளவில்லை.  

தேர்தல் நடத்துவது தொடர்பாக மனு தாரரின் நிலைப்பாட்டைக் கேள்விக் குள்ளாக்கும் அரசாங்கத்தின் வாதம் ஆச்சரியமான ஒன்று. இந்த அணுகுமுறை தேர்தல் நடத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகள் தலையீட்டை முற்றிலும் விலக்கி யிருக்கிறது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனு பவம் கடந்த காலங்களில் என்னவெனில், குறிப்பாக மக்களவைக்குத் தேர்தல்கள் நடை பெற்ற சமயத்தில், திரிபுராவில், பல வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற மோசடிகள் (rigging) வீடியோ எடுக்கப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.

இது போல் அம்மாநிலத்தில் உள்ள இரு தொகுதி களிலும் அநேகமாக பாதியளவிலான வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல்கள்  நடந்தன. இந்தக்காலத்தில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தேர்தல் நடை முறைகளிலும் ஒரு பிரிக்கப்பட முடியாத அங்கமாக மாறியிருக்கக்கூடிய சூழ்நிலை யில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு படுபிற்போக்கு நடவடிக்கையையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் .