tamilnadu

தொன்மையான கட்டடங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு...

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 29 தொன்மைவாய்ந்த கட்டடங் களைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்காகத் தமிழ்நாடு அரசு ரூ. 80 கோடியே 83 லட்சத்து 69 ஆயிரம் நிதியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.சென்னை, கடலூர், திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, நாகப் பட்டினம், தேனி, ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொன்மைவாய்ந்த 29 கட்டடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்காக இந்த நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

;