tamilnadu

img

விடுமுறை அறிவிப்பை வாபஸ் பெற்ற தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை

அயோத்தியில் இருந்த பாபர்  மசூதியை இடித்து கட்டப்பட்  டுள்ள ராமர் கோவில் திங்க ளன்று (ஜனவரி 22) திறக்கப்படுகிறது. இந்த ராமர் கோவில் திறப்பு விழா விற்காக ஒன்றிய அரசு அலுவலகங் களுக்கும் (அரைநாள்), பாஜக மற்றும்  பாஜக கூட்டணி ஆளும் மாநில பள்ளி,  கல்லூரி மற்றும் அரசு நிர்வாகங்க ளுக்கும், பங்குச்சந்தைகளுக்கும் திங்க ளன்று பொது விடுமுறை அறிவிக்கப்  பட்டுள்ள நிலையில், தில்லி மற்றும்  புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை களுக்கும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைகளுக்கும் திங்க ளன்று அரைநாள் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.

 மதம் சார்ந்த விழாவிற்கு மக்களை  காக்கும் மருத்துவமனைகளுக்கு எதற்கு விடுமுறை என அனைத்து தரப்பி லும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும்  நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை யின் விடுமுறை அறிவிப்பு காரணமாக  சுமார் 30,000க்கும் மேற்பட்ட நோயா ளிகள் பாதிக்கப்படக்கூடிய நிலை உரு வானதாக சமூகவலைத் தளங்களில் தனி ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனது.

 இதனால் விடுமுறையை திரும்பப்  பெறுவதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனை தெரிவித்துள்ளது. எதிர்ப்புக்கு மத்தியிலும் புவனேஸ்வர் எய்ம்ஸ்,  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கள் விடுமுறை அறிவிப்பிலிருந்து பின்  வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக் கது.

கண்டுக்கொள்ளாத தென் மாநிலங்கள்

ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பாஜக ஆளும் மாநி லங்களான உத்தரப்பிரதேசம், கோவா,  மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், உத்தர கண்ட், திரிபுரா, குஜராத், ராஜஸ்தான்,  அசாம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி  நடைபெறும் மாநிலங்களான மகா ராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பொது விடு முறை அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்  நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங் கானா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநி லங்கள் ராமர் கோவில் திறப்பு விடு முறை பற்றி ஒரு வார்த்தை கூட உச்ச ரிக்கவில்லை. தென்மாநிலங்களை போன்று “இந்தியா” கூட்டணி கட்சிகள்  ஆளும் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம்,  இமாச்சலப்பிரதேசம், பீகார், பஞ்சாப்  உள்ளிட்ட மாநிலங்கள் பொது விடு முறை அறிவிக்கவில்லை. மேற்கு  வங்கம், இமாச்சலப்பிரதேச மாநிலங்க ளில் ராமர் கோவில் திறப்பிற்கு விடு முறை வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர்கள் தொடர் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அம்  மாநில அரசுகள் கோரிக்கையை நிரா கரித்தன.