tamilnadu

அரசியலமைப்பை மீறிய - நாகரீகமற்ற நடத்தை

தமிழ்நாடு சட்டமன்றத்தில், அரசிய லமைப்புச் சட்டத்தை மீறியும், நாக ரீக மற்றும் நடந்து கொண்ட ஆளுநர் ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:

அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடரில் மாநில அரசின் கொள்கை குறிப்பை படிக்க மறுத்து, அரசியல் உள் நோக்கத்துடன் வெளிநடப்பு செய்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவியின்  நடவடிக்கையினை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

ஆளுநர் உரையில் தனிப்பட்ட கருத்துக்கு இடமில்லை
ஆளுநர் உரை என்பது ஆளு நரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகு ப்பு அல்ல. அவரின் சொந்தக் கருத்துக் களைக் கூற- சட்டப்பேரவை இடமும் அல்ல. ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு தீர்வு இல்லை என்றும், உரை யில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக் களுடன் முரண்படுகிறேன் என்றும் கூறி  கேரள ஆளுநர் பாணியில் 2 நிமிடங் களில் உரையை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில் பேரவைத் தலைவர், ஆளுநர் உரையை தமிழில் முழுவதும் வாசித்து நிறைவுசெய்து விட்டு, தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ரவிக்கு ஏற்கனவே கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கும்போது, ஆளுநர் ரவி கிஞ்சிற்றும் நாகரீகம் இல்லாமல், கடந்த ஆண்டைப் போலவே, தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளி யேறிச் சென்றது அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தையும் தமிழக மக்களை யும் ஆளுநர் அவமதித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. தேசிய கீத த்தை ஆளுநர் அவமரியாதை செய்தார் என்பதும் தெளிவாக வெளிப்பட்டது.

அவை முன்னவரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

தமிழகத்தின் மாண்பையும், சட்ட மன்றத்தின் மரபையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழு உரையும் அவைக்குறிப்பில் ஏற்றப் படும் என்று உடனடியாக அவை முன்னவர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாக அமைந்தது.

அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப் பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளு நர், ஆர்.எஸ்.எஸ்.சின் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே, தமிழ்நாடு அர சுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

ஆளுநரின் ஜனநாயக விரோத நட வடிக்கைகளுக்கும், தமிழக விரோதப் போக்கிற்கும் எதிராக தமிழக மக்களும்,  ஜனநாயக சக்திகளும் தங்களது வலு வான கண்டனக் குரலை எழுப்பிட  வேண்டுமென சிபிஐ(எம்) வலியுறுத்து கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.