சென்னை, ஜூன் 22- ரூ.390 கோடியில் நகர்ப் புறத்தை ஒட்டி உள்ள கிராம ஊராட்சிகளில் சாலைகள், தெருக்கள் மேம்படுத்தப் படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் சனிக்கிழமை, ஊரக வளர்ச்சித் துறை கொள்கை விளக்க குறிப்பைத் தாக்கல் செய்து அமைச்சர் ஐ.பெரி யசாமி கூறியதாவது:
“2024-25 ஆம் ஆண்டில் 2482 கிராம ஊராட்சிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ. 1147 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் 4,386 நூலகங்கள் ரூ. 96 கோடி செலவில் கட்டப்படும். கலை ஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகள் அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு மூலமாக வெளிப்படையாக தேர்வு செய்யப்படுவார்கள். ஊரக வீடுகள் பழுது பார்க் கும் திட்டம் ரூ. 1,954 கோடி யில் செயல்படுத்தப்படும்.”
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
15 புதிய அறிவிப்புகள்
அத்துடன், விவாதங் களுக்கு பதில் அளித்து மேலும் பேசுகையில், “தமிழ் நாடு முழுவதும் நடப்பாண் டில் பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள் தலா 30 லட்சம் வீதம் 150 கோடி யில் கட்டப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரத்து 500 கிராம ஊரா ட்சிகளில் உள்ள மேற்கோள் நிலங்களை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கசிவு நீர்க் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகள் ரூபாய் 400 கோடி செலவில் மேற்கொள்ளப் படும்.
ஊராட்சி ஒன்றியங்களில் பழுதடைந்த பழைய அலு வலக கட்டடங்களுக்கு பதி லாக ஆண்டுதோறும் புதிய அலுவலக கட்டடங்கள் கட் டப்பட்டு வருகின்றன. அதன் படி, நடப்பாண்டில் 10 ஊரா ட்சி ஒன்றிய அலுவலக கட்ட டங்கள் தலா ஆறு கோடி செலவில் 60 கோடி மதிப்பீட் டில் ஒருங்கிணைந்த ஒப்ப டைக்கப்பட்ட வருவாய் கூறு நிதியில் கட்டப்படும்.
அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்
மாநிலம் முழுவதும் சுமார் 500 அரசுப் பள்ளி களுக்கு ரூபாய் 100 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும். இந்தப் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
அதேபோல் போக்கு வரத்து வசதிகளை மேம் படுத்தவும் ஊரக சாலை யின் குறுக்கே செல்லும் ஓடை கள் மற்றும் வடிகால்கள் மேலாக 500 சிறு பாலங்கள் 140 கோடி செலவில் கட்டப் படும். மேலும் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக் கடைகளுக்கு ரூபாய் 60 கோடி செலவில் புதிதாக கட்டடங்கள் கட்டிக் கொடுக் கப்படும்.
ஊரகப் பகுதிகளில் மழை நீரைச் சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 5000 புதிய சிறு குளங்கள் ரூபாய் 250 கோடி அமைத்து கொடுக்கப்படும்” என்பன உள்ளிட்ட 15 அறி விப்புகளையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டார்.