மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் சென்னையில் வங்கி அதிகாரிகள் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கரும்பு விவசாயிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சர்க்கலை ஆலைகளுக்கு வழங்கிய பாக்கித்தொகையை விரைந்துபெற்றுத்தருவதுகுறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.நிதித்துறையில் வங்கிப்பிரிவு கூடுதல் செயலர் பங்கஜ் ஜெயின், மத்திய உணவு பொதுவிநியோகத்துறை இணைசெயலாளர் சுச்சிந்திர மிஸ்ரா, மாநில அரசின் வேளாண்துறை செயலர் ககன் தீப் சிங்பேடி மற்றும்இந்திய ரிசர்வுவங்கி, இந்தியன் வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனராவங்கி உயர்அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.