tamilnadu

img

33 மாதத்தில் ரூ.8.65 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடு வருகை

சென்னை,பிப்.9- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 மாத ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்றும் அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை அமைத்து  எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளியலைக் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் இந்தியப் பொருளியலுக்கு முக்கியப் பங்கு அளிக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் எனும் பெரும் லட்சியத்தை முதல்வர் நிர்ணயித்துள்ளார்.

 ‘முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அதன் மூலம் 2,80,600 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17,371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 7,441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, கடந்த ஜனவரி மாதம், சென்னையில் நடத்தப்பட்ட உலக  முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக வும் மறைமுகமாகவும் 26.90,657 பேருக்கு  வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. நான்காம் கட்டமாக, ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று 3,440 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாடு அரசு  குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங் களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த முதலீடு கள் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அரசு, தமிழ்நாட்டை மிகப் பெரிய அளவில் தொழில் மயமாக்க அடுத்த ஐந்து ஆண்டு களில் 45,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நில  வங்கி உருவாக்கப்படுவதாக தெரிவித் துள்ளது.