சென்னை:
57 வட்டாட்சியர்கள் பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர்களாகப் பணிநியமனம் செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அரசாணையில், “2019-2020ஆம் ஆண்டிற்கான பணிமாறுதல் மூலம் நியமனம் பெறும் துணை ஆட்சியர்களுக்கான தற்காலிகப் பட்டியல் அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி, வட் டாட்சியர்கள் துணை ஆட்சியர்களுக்கான தகுதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள் என்று சான்றளிக்கப் படுகிறது. தமிழ்நாடு குடிமைப்பணியில் பதவி உயர்வு மூலம் 57 வட்டாட்சியர்கள் தற்காலிகத் துணை ஆட்சியர்களாகப் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.வட்டாட்சியர்களை அவர்களது பணியிடத்திலிருந்து விடுவிக்கப்படும் முன்பாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும்” எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.