சென்னை,ஜன.13- பொங்கல் பண்டிகை நகர்ப்புறங் களை விட கிராமப் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படும்.
அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்ப வர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக் கும் மக்கள் பொங்கலை கொண்டாட வெள்ளிக்கிழமையே (ஜன.12) பயணத்தை தொடங்கினர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். அவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வ தற்கு வசதியாக விரிவான ஏற்பாடுகள் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து 5 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைப்பதால் பெரும் பாலானவர்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். கோயம்பேடு, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. வெள்ளிக்கிழமை, எதிர்பார்த்ததை விட அதிக அளவு பயணம் மேற் கொண்டனர்.
வழக்கமாக இயக்கப் படும் 2100 பேருந்துகள் தவிர சிறப்பு பேருந்துகள் 1260 என மொத்தம் 3946 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் நள்ளிரவு 12 மணி நிலவரப் படி 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவல கங்களுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தை சமாளிக்க சனிக்கிழமை மட்டும் 4000 அரசு பேருந்து கள் இயக்கப்பட்டது.
அரசு பேருந்து களில் பயணம் செய்ய சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது தவிர 1600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் பயணம் செய்ய 65 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்களிலிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்ய உள்ளனர். முன்பதிவு செய்து, முன்பதிவு இல்லாத பெட்டி கள் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர்.மேலும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் வெளி யூர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதுவரைக்கும் சொந்த ஊர்களுக்கு சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள் ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.