tamilnadu

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பு!

சென்னை, டிச.30- வரலாறு காணாத அதிகன மழை - வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்கள், தூத்துக்குடி, திரு நெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பை தமிழ்நாடு முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்  கப்பட்ட தூத்துக்குடி, திருநெல் வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கெனவே பல்  வேறு நிவாரண உதவிகள் வழங்  கப்பட்டு வரும் நிலையில், கூடுத லாக உதவிகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டா லின் சனிக்கிழமையன்று சென்னை  தலைமைச் செயலகத்தில் அதி காரிகளுடன் ஆலோசனைக் கூட் டம் ஒன்றை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்  தின் முடிவிலேயே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவின ருக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவற்றுக்கான நிதி தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளி யிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்  பட்டிருப்பதாவது:

புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தலுக்கு -ரூ.385 கோடி
திருநெல்வேலி மற்றும் தூத் துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேத மடைந்த வீடுகளை மீண்டும் புதி தாகக் கட்டித்தருவதும் அரசின் தலையாய கடமை என்பதை கருத்திற்கொண்டு வீடுகள் பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடி வெடுத்துள்ளது.

அதனடிப்படையில், ஊரக  வளர்ச்சித்துறை மூலம் முழுவது மாக சேதமடைந்த வீடுகளை மீண்  டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4  லட்சம் வழங்கிடவும், பகுதி சேதம டைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வரையும் வழங்குவது என வும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்  டங்களிலும் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் மொத்  தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்  றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்  கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பயிர்ச் சேத நிவாரணம் ரூ.250 கோடி
தூத்துக்குடி மற்றும் திரு நெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8  மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்  சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென  இழப்பீட்டு நிவாரணம் மொத்தம்  250 கோடி ரூபாய் வழங்கப்படும்.  பயிர்ச் சேதம் நேரிட்ட விவசாயி களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்  பயிர்க் கடனும் வேளாண் இயந்தி ரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் திரு நெல்வேலி ஆகிய மாவட்டங்க ளில் ஏற்பட்ட கடுமையான வெள் ளத்தினால் இம்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத் தால் அடித்துவரப்பட்ட மண் படிந்  துள்ளது. இதனை அகற்றி மீண்  டும் விவசாயத்திற்கு ஏற்றவகை யில் சீர்செய்துதரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும், இதற்கென வெளி மாவட்டங்களிலிருந்து தேவையான கருவிகள் மற்றும்  உபகரணங்கள் வரவழைக்கப் படும்.

சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் 
சிறு வணிகர்கள், சிறு கடை உரிமை யாளர்கள் மற்றும் தெருவோர வியா பாரிகளின் கடன் தேவைகளை நிவர்த்திச் செய்ய கடன் வழங்கப்பட வுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை 4 சதவிகித வட்டியிலும், ரூ. 1 லட்சம் வரை 6 சதவிகித வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்க ளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப் பிக்கத் தேவையான மூலதனச் செலவு மற்றும் நடைமுறை மூலதனம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு நிதி யுதவி அளித்திட, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் (TIIC) மூலம் ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவா ரணக் கடனுதவித் திட்டம்’ என்ற சிறப்புத்  திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட் டத்தின்கீழ், மேற்கூறிய மாவட்டங் களில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 100 கோடி கடன் வழங் கப்படும். இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை, ஆண்டுக்கு 6 சதவிகித சிறப்புச் சலுகை வட்டி விகிதத்தில் இந்தக் கடனுதவி வழங்கப்படும். தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன், 18 மாதத் தவணைக ளில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் 3,300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

உதவிக் குழுக்களுக்கு ரூ. 350 கோடி கடன்
இந்த இயற்கைப் பேரிடரால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்க ளைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடன் திருப்பம் வெகு வாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி  வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 350 கோடி அளவில் புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம்
பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 4928 மீன்பிடி படகுகள், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவா ரணத் தொகையாக ரூ. 15 கோடி வழங் கப்படும்.

கால்நடைகள் வாங்க கடன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17 ஆயிரம் கால்நடைகளும் 1 லட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் பசு, எருமைக்கு ரூ. 37,500 வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றுக்கு ரூ. 4,000 வரையிலும், கோழி ஒன்றுக்கு ரூ. 100 வரையில் வழங்கப்படும். 

கால்நடை இழப்பினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய கால்நடை களை வாங்க வசதியாக ரூ.1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை

பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர்க ளுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகையாக தலா ரூ. 3000 வழங் கப்படும்.

இவைதவிர வாகனங்களுக்கான காப்பீடு, சேதமடைந்த கல்விச் சான்றி தழ்கள், வருவாய்த்துறை சான்றிதழ்க ளை பெறுவது தொடர்பாகவும் அறி விப்பு வெளியிடப்பட்டு உள்ளது.