tamilnadu

img

சோமாலியாவில் அமெரிக்கா வான்வெளித்தாக்குதல் - 10 தீவிரவாதிகள் பலி

சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோமாலியா நாட்டின் பேல்டோக்லே நகரில் அமெரிக்க ராணுவத்தின் படைத்தளம் உள்ளது.  இங்கு வந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் குழு ஒன்று வாகனம் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது.
இதைத்தொடர்ந்து  அமெரிக்க ராணுவம், அல் ஷபாப் தீவிரவாதிகளை குறிவைத்து 2 வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  வாகனம் ஒன்றும் அழிக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.