tamilnadu

img

1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால்தடங்கள் கண்டுபிடிப்பு

சவுதியில் 1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
சவுதி அரேபியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் உள்ள ஒரு வறண்ட ஏரியைச் சுற்றி மனித மற்றும் விலங்குகளின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது அரேபிய தீபகற்பத்தின் பழமையான வசிப்பிடத்தின் முதல் அறிவியல் சான்று என புதனன்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 233 யானைகளின் புதை படிவங்கள் ஏழு மனிதர்கள், 107 ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகளின் தடயங்களை அகழ்வாராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. 
இதுகுறித்து சவுதி பாரம்பரிய ஆணையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜாசர் அல் ஹெர்பிஷ் கூறியதாவது மான், ஏழு மனிதர்கள், 107 ஒட்டகங்கள் 43 யானைகள் மற்றும் பிற விலங்கு தடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தடயங்கள் விலங்குகள் கூட்டமாக நகர்ந்து கொண்டிருந்ததைக் குறிக்கிறது என தெரிவித்துள்ளார்.