tamilnadu

img

சீனாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 61 பேர் உயிரிழப்பு

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.  
மேலும் சுமார் 37 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. 
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளப்பாதிப்பினால் மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். குவாங்டன் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த 4,300க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.