tamilnadu

சாத்தூர் அருகே தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் நாசம்....

சாத்தூர்:
சாத்தூர் அருகே ஞாயிறன்று அதிகாலைதனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பலலட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்துசாம்பலாகின.விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவருக்கு  சொந்த
மான தீக்குச்சி கம்பெனி அமீர்பாளையம் பகுதியில் உள்ளது. இங்கு தீக்குச்சியில் வேதி மருந்தை சேர்க்கும் குடோனும் உள்ளது.இந்த குடோனில் இருந்து மருந்து சேர்க்காததீக்குச்சி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை திடீரென அதில் தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க முயற்சித்தபோதும், பலன் கிட்டவில்லை. இதையடுத்து,தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள்,
பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சிகளும், குடோனும் எரிந்து சாம்பலாகின. 

;