tamilnadu

கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைக்காய்கள் பறிமுதல்

சிவகங்கை, மார்ச் 1-  சிவகங்கையில், ரசாயன மருந்து தெளித்து பழுப்ப தற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வாழைக்காய்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலு வலர்கள் பறிமுதல் செய்தனர். சிவகங்கை நகர் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை யின் மாவட்ட நியமன அலுவலர் வெ.ஜெயராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சிவகங்கை ஆஷாத் தெருவில் உள்ள வாழைக்காய் குடோனில் ஆய்வு செய்த போது அங்கு ரசாயன மருந்து தெளித்து பழுப்பதற்காக வாழைக்காய்கள் வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வாழைக்காய் களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.