tamilnadu

img

2500 அடி உயரமுள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரான்மலையை தூள் தூளாக்குவதா? சிங்கம்புணரியில் இன்று சிபிஎம் மனிதச் சங்கிலி இயக்கம்

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளதுபிரான்மலை. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப் பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து இந்த ஊருக்குச் செல்லமுடியும்.தற்போது 2,500 அடி உயரமுள்ள பிரான்மலையை தூள் தூளாக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. பிரான்மலையை பாதுகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மலையை உடைப்பது என்னவோ தொடர்கிறது. இந்த மலையை உடைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது வரை பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் உடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது. அதாவது மலை ஜல்லி கற்களுக்காக உடைக்கப்படுகிறது.செயற்கை மணல் தயாரிப்பும் நடைபெறுகிறது. 

உடைக்கப்படும் மலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி தலைமையிலான குழு பார்த்து அதிர்ச்சியடைந்தது.பின்னர் சுற்றியுள்ள கிராமங்களான கிருங்காக் கோட்டை, உடுவன்பட்டி பிரான்மலை ஐந்து ஊர்கள்,தேனாம்பாள்பட்டி, வையாபுரிபட்டி, வாரிபட்டி, செல்லியம்பட்டி,வேந்தன்பட்டி, கொடுங்குன்றம் பட்டி, வண்ணார் இருப்பு, கட்டுகுடிபட்டி, கீழ வண் ணார் இருபபு, குளத்துப்பட்டி, உரத்துப்பட்டி, பிச்சங் குளம்பட்டி, கொள்ளுகுடிப்பட்டி, குளத்துப்பட்டி ஆகிய ஊர்களில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள்”மலை உடைக்கப்படுவதை நிறுத்த வேண்டும்”என்றனர்.

பிரான்மலையைச் சேர்ந்த ஜெயபாரதி கூறுகையில், “திருஞானசம்பந்தர் அருணகிரி சுந்தரமூர்த்தி ஆகிய சுவாமிகளால் பாடப்பெற்ற பாண்டிநாட்டின் 14 ஸ்தலங்களில் பிரான்மலை முதன்மையானது பிரான்மலையில் அரிதான மூலிகைகள் கிடைக்கிறது. குறிஞ்சி நிலத்தின் மலையடிவாரத்தில் பாதாளம், பூமி, ஆகாயம் என மூன்றடுக்கு குடவரைக்கோவில்கள் உள்ளன.கொடுங்குன்றீசுவரர் குயில முதல நாயகி அம்மன், முருகன் சன்னதிகள் பாதாளத்தில் இருக்கிறது.பூமி என்னும் நடுப்பகுதியில் கொடூர வைரவர் சன்னதி உள்ளது. பாரி மன்னன் முல்லைக்கு தேர்தந்த காட்சிகள் சிற்பங்களாக உள்ளது. சிறப்புமிக்க பிரான்மலை மலையை உடைக்க அனுமதிக்கக் கூடாது என்றார்”. செல்லியம்பட்டி ஊராட்சித் தலைவர் சண் முகம் கூறுகையில், “இப்பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் மங்கைபாகர் என பெயரிட்டுள்ளார்கள். பரம்பு மலை உச்சியில் பாலமுருகன் கோவிலும் மத ஒற்றுமைக்கு வித்தாக இருக்கிற முஸ்லிம்களின் ஷேக் அப்துல்லா அவுலியா தர்க்காவும் உள்ளது. தை, ஆடி மாதங்களில் திருவிழாக்கள்நடைபெறும். வருடம்தோறும் “பாரி விழாக்கள்” பத்து நாட்கள் நடைபெறும். 

 வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வெள்ளைக் காரர்களின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக மருது பாண்டியர்களின் உதவியை நாடினார்கள். மருதுபாண்டியர்கள் ஊமைத்துரையை பிரான் மலை குகையில் தங்க வைத்து பாதுகாத்தார்கள். வெள்ளையர்களை விரட்டியடிக்க மருதுபாண்டியர் நிறுவிய பீரங்கிகள் இன்றும்மலைமீது உள்ளது. பிரான்மலை விடுதலைப் போராட்டத்திலும் முக்கிய பங்காற்றியது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. வரலாற்று சிறப்புமிக்க மலையை உடைப்பதை ஏற்கமுடியாது என்றார்.மலை உடைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சியர் ஜெயகாந்தனோ வட்டாட்சியரிடம் மலை குறித்த அறிக்கையை பெற்றுவைத்துள்ளார்.

வட்டாட்சியர் பிரான்மலை, கிருங்காக்கோட்டை உழவன் பட்டி, எல்லாம் பட்டி, சேனாபதி வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, வாடிப்பட்டி, வேந்தன்பட்டி, பற்றி வலைப்பூ, கட்டுகுடிபட்டி, கீழவளவு கீழ வண்ணார் இருப்பு உரத்துப் பட்டி ஆகியன உள்ளிட்டபல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள்”மலை உடைக்கப் படுவதால் விவசாயம் எதிர்காலத்தில் பாதிக்கும்” என்பதை எடுத்துக் கூறியுள்ளனர்.வழக்கறிஞர் இளையராஜா கூறுகையில்,“ஒவ்வொரு குடிமகனும் இயற்கையையும்சுற்றுச் சூழலையும் மேம்படுத்த வேண்டும்.அத்தோடு அதை பாதுகாக்க வேண்டும். காடுகள்,  ஏரிகள், மலைகள், ஆறுகள், பறவைகள் வசிக்கும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதை மீறி மலையை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்திருப்பது சட்டவிரோதமாகும். மலை, மலை சார்ந்த பகுதி என சுமார் 1500 ஏக்கர் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசுகுவாரி உரிமம், வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து பகுதிவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர் ஒருவர் கூறுகையில், “ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் சூரிய ஒளி சிவன் மீதுவிழுகிறது. இந்தச் சிறப்பு எங்கும் இல்லை” என்றார்.மதச்சார்பின்மைக்கு அடையாளமாக விளங்கும் பிரான்மலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென்கிறார் முஹமது பாரூக்.பிரான்மலையைசுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென தாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது குரல்கொடுத்ததை நினைகூறும் முன்னாள் பேரவை உறுப்பினர் அருணகிரி “என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண் டும். அதனொரு பகுதிதான் தற்போது மக்கள் நடத்திவரும் போராட்டங்கள்” என்றார்.மலையைச் சுற்றியுள்ள கிராம மக்களின் விவசாயம் விவசாயத்தின் வாழ்வாதாரம் பொய்த்து போகும் அபாயம் உள்ளது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ்.காந்திமதி.

மலையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும் இதைச்சுற்றியுள்ள விவசாயத்தையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்ற உணர்வோடு எங்களது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு உணர்த்திவருகிறோம். எங்களது நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென்கிறார் பரம்பு மலை போராட்டக்குழுத் தலைவர் கர்ணன்.இன்று மனிதச் சங்கிலிஇந்த நிலையில் பிரான்மலையை பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிறன்று சிங்கம்புணரியில் மனிதசங்கிலி இயக்கத்தைநடத்துகிறது.