tamilnadu

இளையாங்குடி பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி ஆட்சியரிடம் சிபிஎம் மனு

சிவகங்கை, ஆக.30- சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி தாலுகாவில் 108 ஆம்புலன்ஸ் வசதியை செயல்படுத்தப்பட கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் அழ கர்சாமி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத் துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி தாலுகா வறட்சி மிகுந்த மாவட்டமாகும். இப்பகுதியில் தினம்தோறும் மரம் வெட்ட, 100 நாள் வேலைக்கு சென்று ரூ200 கூலி பெறுகிறவர்களே அதிகமாகும். இங்கு கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தை கள் மற்றும் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பெரும் அவஸ் தைக்கு ஆளாகி வருகிறார்கள். அவசரத் தேவைக்கு சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு செல்ல வாகனங்களுக்கு ரூ.2000 வரை கொடுத்துவருகிறார்கள். இந்த ரூ.2000 மும் கந்து வட்டிக்கு வாங்கி கொடுக்கும் அவலநிலையில் இப்பகுதி மக்கள் உள்ளார்கள். எனவே இப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வசதியை உடனடியாக செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.