tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை

ரா.பி.சேதுப்பிள்ளை ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்று வதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பி டும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரை நடையில் அடுக்குமொழியையும், செய்யுள் களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை யும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகிறது. 1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசி ரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தா லும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையா புரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சை யப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரி களில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தி னார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டி யாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சி யினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அகா டமியின் பரிசு வழங்கப்பட்டது. கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப் பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரை நடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப் பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார். அடுக்குமொழி, எதுகை மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருது வழங்கி யது. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணி களுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ‘முனை வர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி “வெள்ளி விழா” எடுத்தும், “இலக்கியப் பேரறிஞர்” என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. இவருடைய நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. இன்று (மார்ச் 2) ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்தநாள்...

;