பேருந்தை மறித்து ஆட்டம் போட்ட இளைஞர்கள் நாமக்கல்
, ஜூன் 4- ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலை யில், பள்ளிபாளையத்தில் இளைஞர்கள் பேருந்தை மறித்து சாலையில் ஆட்டம் போட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி னர். இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், செவ்வாயன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி முதன் முதலாக கோப்பையை வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியதால், அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம டைந்து, பட்டாசுகள் வெடிப்பது உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்த பகு தியில், உள்ளூரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். அதில் சிலர் உற்சாக மிகுதியால் இருசக்கர வாக னத்தில் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, அரசு பேருந்து முன்பாக சுற்றி சுற்றி வருவது போன்ற செயல் களில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேலே 20க்கும் மேற்பட்டோர் குவிந்து பட்டாசுகள் வெடித்தும், குட்டிக்கரணங்கள் அடித்தும், கூச்சலிட்டும் கொண்டிருந்த னர். மேலும், பேருந்தை மறித்து ஆட்டம் போட்டததால், பய ணிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.
யானை தாக்கி மீனவர் பலி
மேட்டுப்பாளையம், ஜூன் 4- பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் யானை தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த வர் ஜார்ஜ் என்கிற செல்லத்துரை (49) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் செவ்வாயன்று இரவு பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியிலுள்ள மயில் மொக்கை என்னும் இடத் தில் மீன்பிடிப்பதற்காக வலை விரித்து காத்திருந்த நிலையில், அங்கேயே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை நீர்த்தேக்கப் பகுதியை தாண்டி மயில் மொக்கை பகுதிக்கு வந்த போது, உறங்கி கொண்டிருந்த செல்லத்துரையின் தலையில், காலால் மிதித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகலறிந்த சிறுமுகை வனச் சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லத்துரை யின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினரும், சிறுமுகை காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணி நிறைவு பாராட்டு விழா
தருமபுரி, ஜூன் 4- பணி ஓய்வுபெற்ற அரசு விடுதி காப்பாளர்களுக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர். தருமபுரி மாவட்டத்தில் அரசு மாணவர் விடுதியில் விடுதி காப்பாளர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே.தேவன், பி. ராமனுஜம் ஆகியோருக்கான பணி நிறைவு பாராட்டு விழா, முத்து இல்லத்தில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் அன் பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் சக்தி, தருமபுரி மாவட்ட காப்பாளர் சங்கத்தின் தலைவர்கள் தினமணி, மூர்த்தி, விடுதி காப்பாளர்கள் சித்ரா, வசந்தி, சுமதி, மணி மேகலை, தருமபுரி மாவட்ட விடுதி பணியாளர் சங்க தலை வர் பச்சியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிரதாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த விவ ரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி புதனன்று ஆய்வு செய்தார். கன்னங் குறிச்சி பகுதியில் நடைபெற்ற ஆய்வின்போது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரா.மகிழ்நன் உடனிருந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை மீட்க முடியாததால் ஒருவர் உயிரிழப்பு தருமபுரி
, ஜூன் 4- ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை, ஏலத்தில் எடுக்க முடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளர் செவ்வாயன்று உயி ரிழந்தார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகா சனஅள்ளியைச் சேர்ந்தவர் மாதேஷ் (40). இவர் கடந் தாண்டு ரேசன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டு, அவ ரது வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மே 30 ஆம் தேதி ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, சிறையி லிருந்து வெளியே வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று பறி முதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலம் மூலம் மீட்க முயன்றார். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீ சாரை அணுகியபோதும், உரிய விவரங்கள் தெரி விக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த மே 30 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று வாகனத்தை மீட்க முடியாமல் போன தால், மனமுடைந்த அவர் போலீசாரை கண்டித்து அங்கேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காய மடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அனு மதிக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று சிகிச்சை பல னின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை
கோவை, ஜூன் 4- மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப் புத்துறை அதிகாரிகளுடன், தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகர்வால் ஆலோ சனை மேற்கொண்டார். கோவை மாவட்ட தீயணைப்பு அலுவல கத்தில், மேற்கு மண்டல தீயணைப்பு அதி காரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புத னன்று நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழு துறை டிஜிபி சீமா அகர் வால் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட் டங்களைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதி காரிகளிடம், தீயணைப்புத்துறை அலுவ லகங்களில் உள்ள பாதுகாப்பு உபகர ணங்கள், வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? என சீமா அகர்வால் கேட்டறிந்தார். தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள வணிக வளாகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், கோயில்கள் ஆகிய இடங்களில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுத்து உள்ளார்களா? தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங் கள், வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீய ணைப்பு மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட தகுந்த ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார் களா? என கேட்டறிந்தார். தொடர்ந்து மழைக் காலங்களில் வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.
இலவச வேட்டி, சேலை திட்டத்தில் முழுமையாக கூலி வழங்க வலியுறுத்தல்
ஈரோடு, ஜூன் 4- இலவச வேட்டி, சேலை திட்டத்தில் நெசவாளர்களுக்கு முழுமையான கூலி வழங்க வேண்டுமென, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது, நியாய விலை கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே செயல்படுத்தப்பட்ட இந்த திட்டமானது, தற்போது நெசவாளர்களுக்கு பயன்படாமல், உரிய கூலியை வழங்காத நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு உற்பத்தி கூலிக்காக 10 விழுக்காடு உயர்த்தி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், பழைய கூலியைவிட குறைவான கூலியே வழங்கப்படுவதாகப் புகார்கள் வருகின்றன. நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காகக் கொண்டு வந்த திட்டத்தில், உரிய முறையில் அரசு வழங்கியிருக்கும் முழு கூலியை வழங்க நடவடிக்கை எடுத்து, பல லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.
பணம் கொள்ளை: 3 பேர் கைது
நாமக்கல், ஜூன் 4- ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ் மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, ரூ.2.40 லட்சம் கொள் ளையடித்த வழக்கில், 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த திம்மநாயக் கன்பட்டி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாள ராக முத்துசாமி (40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 31 ஆம் தேதி இரவு 11 மணியளவில் விற்பனை முடித் துவிட்டு, பணத்துடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி னார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டு ரூ.2.40 லட்சத்தை கொள் ளையடித்துச் சென்றது. இதுகுறித்து மங்களபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளையர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனம் தொடர்பாக தனிப் படை போலீசார் விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈடு பட்ட உச்சிமாகாளி (22), நவநீதன் (22), கார்த்திக் பெருமாள் (23) ஆகிய 3 பேரை செவ்வாயன்று கைது செய்தனர். அவர் களிடமிருந்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.