கோவை சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடி வரும் காட்டு மாடை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 3 நாள்களாக சரவணம்பட்டி கீரணத்தம் பகுதிகளில் காட்டு மாடு ஒன்று நடமாடுவதாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து காட்டுமாடை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் தென்பட்ட காட்டு மாடு இரவு வனத்துறையினரின் பார்வையில் இருந்து தப்பியது. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி ஆகிய பகுதிகளில் காட்டு மாடு தென்பட்டது. பின்னர் வனத்துறையின் பார்வையில் இருந்து மீண்டும் மறைந்தது. தற்போது சின்னியம்பாளையம் பகுதியில் காட்டு மாடு தென்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் காட்டுமாடை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மாட்டை பிடித்து பாதுகாப்பாக வனப் பகுதிக்குள் விட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.