அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
உடுமலை, ஜூன் 7– உடுமலை அமராவதி அணை யில் இருந்து குறுவை நெல் சாகு படிக்காக அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் சனியன்று தண் ணீர் திறந்து விட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத் தில் உள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வரு கின்றன. மேலும், ஆற்றின் வழி யோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதா ரமாகவும் உள்ளது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், 29 ஆயிரத்து, 387 ஏக்கர் நிலங் களும், புதிய ஆயக்கட்டு பாசனத் தில், 25,250 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை முன்னதாகவே துவங்கிய நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, தலை யாறு, மூணாறு, வால்பாறையின் கிழக்கு பகுதி மற்றும் கொடைக் கானல் மேற்கு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், அணை யின் முக்கிய நீர்வரத்து ஆறுக ளான, பாம்பாறு, சின்னாறு, தேனாறு மற்றும் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நீர்மட் டம் வேகமாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த முள்ள 90 அடியில் 82.75அடியாக உள்ளது. அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் மாதமும், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, ஆகஸ்ட் மாதமும் வழக்கமாக பாசனத்திற்கு நீர் வழங்கப்படும். இந்நிலையில் நடப்பாண்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ள நிலையில், முதற்கட்டமாக, அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய ராஜ வாய்க் கால் பாசனத்தில் உள்ள, 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகை யில் நீர் திறக்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல், பழைய, புதிய ஆயக் கட்டு பாசன விவசாயிகளும் நீர் திறக்க கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, முதற்கட்ட மாக ராஜ வாய்க்கால் பாசன நிலங் களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் 2073.63 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவிட் டுள்ளது. அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். இதில், நாடாளு மன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.