கிராமத்தில் இருந்த மக்களை வெளியேற்றும் வனத்துறை ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட கிராம மக்கள்
உதகை, ஜூலை 7- அஜ்ஜூர் கிராமத்தில் இருந்த மக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கையை நிரந்தர மாக நிறுத்த வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த கக்குச்சி ஊராட்சிக்குட்ட அஜ்ஜூர் கிராமத்தில் சுமார் 350 படு கர் இன குடும்பங்கள் 300 ஆண்டு களுக்கு மேலாக வாழ்ந்து வரு கின்றனர். இவர்களுக்கு அரசு சார் பில், பள்ளி, சமுதாயக் கூடம் மற் றும் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக் கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு பெற்றுள்ளனர். தவிர, கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற் கான வரி கட்டி, அனுபவித்து வரு கின்றனர். இங்குள்ள, 180 வீடு களுக்கு, 2008 ஆம் ஆண்டு வரு வாய் துறை வாயிலாக, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட் டுள்ளது. மேலும், 105 வீடுகளுக்கு வழங்குவதற்கான இலவச பட்டா, உதகையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், வழங்குவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜ்ஜூர் கிரா மத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவ சாய நிலங்கள், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கட்டபெட்டு வனச் சரகத்திற்கு சேருவதாக, சென்னை உயர்நீதிமன்றம் 2017 பிப்., மாதம் ஆணை பிறப்பித்துள்ளதாக கூறி, 140 வீடுகளை காலி செய்ய வனத் துறை நோட்டீஸ் வினியோகித்தது. வனத்துறையின் இந்த நடவ டிக்கையால் அஜ்ஜூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் அப்போதைய மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். அவர் அப்பகுதி யிலிருந்து யாரும் வெளியேற் றப்பட மாட்டார்கள். அப்பகுதி நில அளவை செய்ய வனத்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்படும். வன உரிமை சட்டத்தின் கீழ் அப் பகுதியில் விவசாயம் மற்றும் குடியிருப்பதற்கான சான்று வழங் குபவர்களுக்கு அனுபோகம் வழங் கப்படும். என தெரிவித்தார். தற்போது, மீண்டும் அஜ்ஜூர் பகுதியில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறை இறங் கியுள்ளதால், அந்த நடவ டிக்கையை நிரந்தரமாக நிறுத்தக் கோரி அஜ்ஜூர் கிராம நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செய லாளர் விஸ்வநாதன் தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கள் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட் டனர். பின், தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுத்தனர். மேலும் கிராமத்தை காலி செய்ய நடவ டிக்கை எடுத்தால் பெரிய போராட் டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.