tamilnadu

வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை, ஜூன் 26- கோவையில் உள்ள தமிழ்நாடு  வேளாண் பல்கலைக் கழகத்தில்  இளம் அறிவியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா முதலிடம்  பெற்றார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் பட்டப் படிப் பிற்கு இந்த ஆண்டுக்கான தர வரிசை பட்டியல் புதனன்று வெளி யிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டி யலில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் : இந்த கல்வியாண்டில் தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகத் திற்கும் வேளாண் மையப் பிரிவு அண்ணாமலை பல்கலைக் கழகத் திற்கும் ஒரே விண்ணப்பம் வழி யாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல் கலைக் கழகத்தில் உள்ள 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு  அரசாங்க கல்லூரிகளுக்கு 2,516  இடங்களும், தனியார் கல்லூரிக ளுக்கு 445 இடங்களும் என மொத் தம் 6,921 இடங்கள் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணா மலை பல்கலைக் கழகம் தெற்கு  3,40 இடங்களுக்கான மாணவர்  சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் இளம் அறிவி யல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 37 ஆயிரத்து 7 பேர்  விண்ணப்பித்தனர். அவர்களுக் குள் 29,349 பேர் தரவரிசையில் தர  வரிசைக்கு தகுதியானவர்கள் என  கருதப்பட்டனர். இந்த ஆண்டில் 195 மதிப்பீட்டில்  569 பேரும் 190 மதிப்பெட்டியில் 1,956  பேரும் உள்ளனர். இந்த தரவரிசை  பட்டியல் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த  திவ்யா என்ற மாணவி முதலிடத்தை யும், கடலூரைச் சேர்ந்த ஹம்தா மெஹதாப் என்ற மாணவி இரண் டாம் இடத்தையும், இலக்கியா என்ற மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். இது தவிர 25 இடங்களை பிடித்த  மாணவ, மாணவிகளுக்கு தரவ ரிசை பட்டியல் பல்கலைக் கழக  இணையதளத்தில் வெளியிடப் பட்டு உள்ளது என்றும் அதில் கூறப் பட்டு உள்ளது.