tamilnadu

img

மின் மயானத்தில் அதிக கட்டணம் வசூல்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

மின் மயானத்தில் அதிக கட்டணம் வசூல்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி, மே 13- பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்த மான மின் மயானத்தில் அதிகமாக கட்ட ணம் வசூல் செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மின் மயா னத்தில் பராமரிப்பு சேவையை ரோட்டரி  கிளப் எடுத்து செய்து வருகிறது. மின்  மயானத்தில் இறந்தவர் உடலை எரி யூட்டப்படுவதற்கு வசூல் செய்யப்ப டும் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு சடலத்தை எரியூட்டுவதற்கு விண் ணப்பக் கட்டணம் என்று ரூ.250, சட லத்தை எரியூட்டுவதற்கு ரூ.500ம், ரோட்டரி கிளப் டிரஸ்ட்டுக்கு ரூ.1750, அமரர் ஊர்தி (ரோட்டரி கிளப்) ரூ.2000  என மொத்தமாக இறந்தவர் சட லத்தை எரியூட்டுவதற்கு ரூ.4500 தர வேண்டியள்ளது. மேலும், அரை மணி நேரம் தாமதம் என்றால் சுமார் ரூ.6000 வரை வசூல் செய்யப்படுகிறது. ஏழை,  எளிய குடும்பத்தினர் இந்த தொகையை  தர முடியாத நிலையில் உள்ளனர். சேவை நோக்கத்தோடு எரியூட்டு மின்  மயானத்தை நடத்தி வருவதாக ரோட்டரி  கிளப் சார்பில் கூறப்பட்டாலும், அதிக  கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரு கிறது. எனவே, கட்டணத் தொகையை குறைத்து சேவை நோக்கத்துடன் இறந்த நபரின் சடலத்தை எரியூட்ட ஏற் பாடு செய்ய வேண்டும், என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.