வாலிபர் சங்க முன்னெடுப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
கோவை, ஜூன் 26- வாலிபர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாண வர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங் கப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் கிழக்கு, அத்திக்குட்டை கிளை சார்பில், பள்ளி மாண வர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற் றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா புதனன்று மாலை நடைபெற்றது. அத்திக் குட்டை பகுதியில் சங்கத்தின் கிளைத் தலை வர் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சங்கத்தின் மாநிலப் பொருளா ளர் எஸ்.பாரதி கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி யில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபக ரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெள்ளிங்கிரி, வாலிபர் சங்க கிளைச் செயலாளர் விக்னேஷ், நிர்வாகி ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.